புலம்பெயர்
என்ற பதம் தமக்கு பிடிக்காது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷதெரிவித்துள்ளார்.
மிஹிந்தலையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர்இதனைக்
குறிப்பிட்டுள்ளார்.
தமிழீழ
விடுதலைப் புலிகளின் வலுவான வலையமைப்பு ஒன்று உலகின் பலநாடுகளில் பரவி
வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். பல்வேறு வழிகளில் நாட்டுக்கு குந்தகம்
ஏற்படுத்தும் முயற்சியில் இந்தபுலி ஆதரவாளர்கள் செயற்பட்டு வருகின்றனர் என
அவர் தெரிவித்துள்ளர்.
வெளிநாடுகளில்
வாழ்ந்து கொண்டு நாட்டுக்கு எதிராக சதித் திட்டம்தீட்டும் தரப்பினர்
தங்களை புலம்பெயர் இலங்கையர் என அடையாளப்படுத்திக் கொள்வதாகஜனாதிபதி
சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, புலம்பெயர் என்ற சொல்லே தமக்கு பிடிப்பதில்லை என அவர்தெரிவித்துள்ளார்.