![]()
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் உலகம் முழுவதும் போர் ஏற்படும்
என்று பிரான்ஸ் ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோசி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஜனாதிபதி சர்கோசியை பிரான்சின் உயரதிகாரிகள் சந்தித்து பேசினர். அப்போது
ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்ட நான்கு இராணுவ வீரர்களுக்கும் அஞ்சலி
செலுத்தப்பட்டது.
|
அப்போது பேசிய சர்கோசி, "எமது வீரர்களுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை
தொடர்ந்தால் ஆப்கானிஸ்தானின் இராணுவத்துக்கு பிரான்ஸ் அளித்து வரும்
உதவியும், பயிற்சியும் நிறுத்தப்படும்.மேலும் பிரான்ஸ் இராணுவம்
முன்கூட்டியே தாய்நாடு திரும்ப நேரிடும்" என்று எச்சரித்தார்.
மேலும், ஈரான் அணு ஆயுதங்களின் மீது கொண்டுள்ள ஆசையின் காரணமாக போர்
உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இஸ்ரேலிய அரசியல்வாதிகள் அச்சுறுத்தியபடி
ஈரான் மீது இஸ்ரேல் போருக்குத் தயாராகி வருகிறது.
இதனால் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பிரச்னை எதுவும் தீரப் போவதில்லை.
மாறாக உலகம் முழுக்க குறிப்பாக மத்தியக் கிழக்கு நாடுகளில் போரும்
குழப்பமும் உருவாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.
|
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் உலகம் முழுவதும் போர் வெடிக்கும் - பிரான்ஸ் ஜனாதிபதி எச்சரிக்கை.
Related Posts :
Labels:
உலகம்