பாராளுமன்றத்திலும் நுழைந்தது " கொலைவெறி" பாடல்



தமிழகத்திலிருந்து வெளிவந்துள்ள ‘வைதிஸ் கொலைவெறி’ பாடலுக்குப் பதிலளிக்கும் வகையில் யாழ் இளைஞன் ஒருவர் கொலைவெறி பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்தப் பாடலை தமிழகத்தின் முதல்வர் ஜெயலலிதாவுக்கும், மு. கருணாநிதிக்கும் அனுப்பிவைக்க வேண்டும் என ஏ. எச். எம். அஸ்வர் எம்.பி. நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

கொலைவெறி, கொலைவெறி கொலைவெறி என ஆரம்பித்த அஸ்வர் எம்.பி. எமது நாட்டில் ‘நோ. கொலைவெறி’ ‘நோ. கொலைவெறி’ எனக் கூறினார். ஊழியர் சேமலாபநிதியச் சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு பேசும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கடந்த காலங்களில் ஜே.வி.பி.யினர் கொலை வெறி, கொலைவெறி. கொலை வெறி என அப்பாவி இளைஞர்களையும் இணைத்துக்கொண்டு கொன்று குவித்தார்கள்.

இன்று மீண்டும் முன்னாள் புலி உறுப்பினர்களையும் இணைத்துக்கொண்டு கொலைவெறியை ஆரம்பிக்க முற்படுவதாகத் தெரிகிறது. உண்மையில் அவர்கள் தான் கொலைவெறி, கொலைவெறி, கொலைவெறி உடையவர்கள் என்றார்.

எமது நாட்டில் கொலைவெறி கிடையாது. ‘நோ கொலைவெறி’ ‘நோ கொலைவெறி’ என்றார். எதிர்த்தரப்பில் ஜே.வி.பி. சுனில் ஹந்துன்நெத்தியும் கொலைவெறி, கொலைவெறி, கொலைவெறி என கோஷமிட்டார்.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now