
கொழும்பு பிராந்தியத்தைச் சேர்ந்த பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் சிறுமி ஒருவரை பாடசாலை வானுக்குள் வைத்து துஷ்பிரயோகம் செய்த நபரைக் கைது செய்வதற்கு பொலிஸாரின் ஒத்துழைப்பைக் கோருமாறு கொழும்பு மேலதிக நீதவான் குற்றத் தடுப்புப் பிரிவு பொலிஸாருக்கு இன்று (11) உத்தரவிட்டார்.
சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் வேண்டுகோளுக்கு இணங்கவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது
குறிப்பிட்ட சிறுமியைத் தினமும் பாடசாலைக்கு அழைத்துச் செல்லும் வானின் சாரதியே இந்தச் சிறுமியைப் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார். ராகமையைச் சேர்ந்த இந்த மாணவியை அவர் வல்லுறவுக்கு உட்படுத்திய பின் சிறுமியை மோசமாக ஒளிப்பதிவு செய்துள்ளார் வழக்கு பெப்ரவரி 12 வரை ஒத்தி வைக்கப்பட்டது.