தெற்கு அதிவேக பாதையில் முதலாவது மரண சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.
இன்று அதிகாலை இந்த பாதையில் இடம்பெற்ற வாகன விபத்து ஒன்றில் 25 வயது இளைஞர் ஒருவர் பலியானதாக தெரிவிக்கப்படுகிறது.
காவற்துறையினர் சம்பவத்தை உறுதிப்படுத்தியுள்ளனர்.
தெற்கு அதிவேக பாதை திறக்கப்பட்டதன் பின்னர், இந்த பாதையில் இடம்பெற்ற
முதலாவது மரண சம்பவம் இதுவாகும் என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.