நோர்வேயில்
விடுதலைப் புலிகளின் சின்னங்களுடன் அஞ்சல்தலை வெளியிட்டமை தொடர்பாக,
கொழும்பிலுள்ள நோர்வே தூதரகத்துடன் தொடர்பு கொண்ட இலங்கை வெளிவிவகார
அமைச்சு கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
அத்துடன்
ஒஸ்லோவில் உள்ள இலங்கைத் தூதரக அதிகாரிகள் இந்த அஞ்சல்தலைகளை தடைசெய்வது
தொடர்பாக, நோர்வே வெளிவிவகார அமைச்சுடனும் அந்த நாட்டின் அஞ்சல்
தொலைத்தொடர்புத் துறையுடனும் கலந்துரையாடி வருவதாக தகவல்கள் வெளியாகி
உள்ளன.
பல ஐரோப்பிய
நாடுகளில் விடுதலைப் புலிகளின் சின்னங்களுடன் அஞ்சல் தலைகள் வெளியிடப்பட்ட
போது, இலங்கை அரசாங்கம் கடும் எதிர்ப்புத் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
தற்போது,
விடுதலைப் புலிகளின் சின்னங்களுடன் அஞ்சல் தலை வெளியிட்டமைக்கு நோர்வே
இதற்கு அனுமதி வழங்கியது குறித்து இலங்கை அரசு தனது சீற்றத்தை
வெளிப்படுத்தியுள்ளது.