ஜெனீவா சவால்களை எதிர்கொள்ளத் தயார் - இலங்கை

ஜெனீவா சவால்களை எதிர்கொள்ளத் தயார் - இலங்கை

ஜெனீவா மனித உரிமை கவுன்ஸில் கூட்டத்தொடர் சவாலுக்கு தயார் என இலங்கை அறிவித்துள்ளது.

சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் மாநாட்டில் கலந்துக் கொள்வதற்காக, அமைச்சர் மஹிந்த சமரசிங்க தலைமையிலான குழுவினர் ஜெனீவா நோக்கிச் சென்றனர்.

இம்மாதம் 27ம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் மாநாட்டில் அமைச்சர் மஹிந்த சமரசிங்கவுடன், இலங்கையின் 50 பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.

அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், அநுர பிரியதர்ஷன யாப்பா, நிமல் சிறிபால டி சில்வா ஆகியோரும், சட்ட மா அதிபர் காரியாலயத்தின் பிரதிநிதிகளும், இந்த மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளனர்.

ஜெனீவாவில் இலங்கையை அமெரிக்கா எதிர்க்கும் என்பது நாம் அனைவரும் ஏற்கனவே அறிந்த விடயமாகும்.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now