ஆப்கானிஸ்தான்
நாட்டின் தெற்கு பகுதியில், பொலிஸார் நடத்திய அதிரடி சோதனையில், தற்கொலைப்
படையைச் சேர்ந்த 2 சிறுவர்கள் உள்ளிட்ட 5 பயங்கரவாதிகள் கைது
செய்யப்பட்டனர்.
இது தொடர்பாக பத்திரிகையாளர்களை சந்தித்த அம் மாகாண செய்தித் தொடர்பாளர்
ஜல்மாய் அயூப் கூறியதாவது:- கைதான 2 சிறுவர்களும், 10
வயதிற்குட்பட்டவர்கள் என்றும், அவர்களின் உள்ளாடைகள் முழுவதும்
வெடிபொருட்களால் நிரப்பப்பட்டிருந்தது.
கந்தஹாரில் இயங்கி வரும் ஆப்கான் மற்றும் சர்வதேச படைகளின் மீது இந்த சிறுவர்கள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தனர்.
தக்க சமயத்தில், இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
பாதுகாப்புப் படையினர்களை குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல்களில்
பெரும்பாலும் சிறுவர்கள் மற்றும் இளம் வயதினரை தலிபான் பயங்கரவாத அமைப்பு
அதிகளவில் பயன்படுத்தி வருவதாக அவர் மேலும் கூறினார்.