தேர்தலில் அமெரிக்கா வாழ் இந்தியர்கள் ஒபாமாவையே ஆதரிப்பர்; கருத்துக் கணிப்பில் தெரிவிப்பு

news
அமெரிக்காவில் அதிபர் தேர்தலில், அமெரிக்கா வாழ் இந்தியர்கள் ஒபாமாவையே ஆதரிப்பர் என அங்கு மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில், இவ் ஆண்டு நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. அதில், ஆளும் ஜனநாயகக் கட்சி சார்பில், தற்போதைய அதிபர் பராக் ஒபாமாவுக்கும் எதிர்க் கட்சியான குடியரசுக் கட்சி சார்பில், மிட் ரோம்னி, ரோன் பால் மற்றும் ரிக் சன்ட்ரோம் ஆகியோருக்கு இடையில், பலத்த போட்டி நிலவுகிறது.

இந்நிலையில், பஸ்ரன் நகரில் இயங்கி வரும், ஐ.என்.இ. மீடியா என்ற நிறுவனம், கடந்த 22 முதல் 26 வரையிலான தேதிகளில், அமெரிக்கா முழுவதுமான இணையத்தின் ஊடாக கருத்துக் கணிப்பு ஒன்றை மேற்கொண்டது.
 இக் கருத்துக் கணிப்பில், அமெரிக்காவில் வாழும் ஆசியக் கண்டத்தைச் சேர்ந்தோரும் இணைத்துக்கொள்ளப்பட்டனர்.

80 சதவீத அமெரிக்க இந்தியர்கள், அதிபர் பராக் ஒபாமாவுக்குத் தான் வாக்களிப்பர் என அக் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தத்தில், 80 சதவீதம் பேர் ஒபாமாவிற்கு ஆதரவாகவும், 14.7 சதவீதம் பேர் ரோம்னிக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்துள்ளனர். அதே நேரம், குடியரசுக் கட்சி வேட்பாளர்களில், ரோம்னிக்கு 51.9 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now