மூன்று
பேர் கொண்ட குடும்பமொன்று 7500 ரூபாவுடன் வாழ்க்கை நடத்த முடியும் என்பதை
நிரூபிப்பதற்காக பகிரங்க விவாதத்திற்கு தான் தயார் என கல்வி அமைச்சர்
பந்துல குணவர்தன கூறியுள்ளார்.இதற்காக சிறந்த பொருளாதார அறிவுகொண்ட எந்த நபரையும் விவாதத்தில் எதிர்கொள்ளத் தயார் என இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாடொன்றில் அவர் கூறினார்.
பொருளியல் ஆசிரியராக பணியாற்றிய அமைச்சர் பந்துல குணவர்தன இது தொடர்பாக மேலும் கூறுகையில், ஒரு குடும்பம் மாதாந்த வருமானத்தின் 41 சதவீதத்தை மாத்திரம் உணவுக்காக செலவிடுவதாகவும் ஏனையவற்றை ஆடைகள் மற்றும் கட்டணங்களை செலுத்துவதற்கு பயன்படுத்துவதாகவும் அவர் கூறினார்.


