
சனல் 4 அலைவரிசையினால் பயன்படுத்தப்பட்ட ஒளிப்பதிவுகளானவை
எல்.ரி.ரி.ஈ.யினால் வெளியிடப்பட்ட திரிபுபடுத்தப்பட்ட ஒளிப்பதிவுகள் என
ஐ.ரி.என். தொலைக்காட்சியில் தயா மாஸ்டர் கூறினார்.
எல்.ரி.ரி.ஈ. தலைவர் பிரபாரகனின் 12 வயதான மகன் பாலச்சந்திரன்
இராணுவத்தினரால் கொல்லப்பட்டதாக சனல் 4 அலைவரிசையின் புதிய வீடியோவில்
குற்றம் சுமத்தப்படுவது குறித்து தயா மாஸ்டர் கூறுகையில், எல்.ரி.ரி.ஈ.
காவலர்களின் கடும் பாதுகாப்பில் பாலச்சந்திரன் இருந்ததாகவும் அவர் தப்பியோட
முயற்சித்தபோது எல்.ரி.ரி.ஈ. காவலர்களால் சுடப்பட்டிருக்கலாம் எனவும்
குறிப்பிட்டுள்ளார்.