இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தின் பாடசாலைப் பரீட்சைகள் ஒழுங்கமைப்புக்
கிளையினால் இவ்வருடத்திற்கான க.பொ.த. (உ/த) பரீட்சைக்கான விண்ணப்பங்களை
பரீட்சாத்திகளிடமிருந்து கோரியுள்ளது. புதிய, பழைய பாடத்திட்டங்களுக்கான
தோற்றவுள்ள பரீட்சாத்திகள் இப்பரீட்சைக்கு விண்ணப்பம் செய்ய முடியும்.
மேற்படி பரீட்சைக்கு தனிப்பட்ட முறையில் தோற்றுவதற்கான விண்ணப்பப்
படிவங்கள் 2012 மார்ச் மாதம் 01ம் திகதி முதல் 30ம் திகதி வரை
ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.