புதிய சாதனை படைத்தார் மெஸ்ஸி

பார்சிலோனா அணியின் நட்சத்திர வீரர் லியனொல் மெஸ்ஸி தனது சிறப்பான பருவகாலத்தைத் தொடர்வதுடன் புதிய சாதனையொன்றையும் படைத்துள்ளார். நேற்றைய தினம் பார்சிலோனாவிற்காக தனது 234ஆவது கோலைப் பெற்றுக்கொண்ட மெஸ்ஸி, பார்சிலோனா சார்பாக அதிக கோல்களை அடித்த வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.

நேற்றைய தினம் ஸ்பானிய லீக்கொன்றில் கிரனடாவிற்கு எதிரான போட்டியில் 3 கோல்களை அடித்த மெஸ்ஸி, தனது முதலாவது கோலை அடித்ததும் 232 கோல்களைப் பெற்று பார்சிலோவிற்கான சாதனையைப் படைத்திருந்த சீசர் ரொட்ரிகஸின் சாதனயைச் சமப்படுத்தினார். அதனை அடுத்து இரண்டு கோல்களை மேலதிகமாக அடித்து அவர் சாதனையை தன்வசப்படுத்தினார்.

நேற்றைய போட்டியில் பார்சிலோனா கழகம் 5-2 என்ற ரீதியில் வெற்றிபெற்றிருந்ததோடு, ரியல் மட்ரிட் கழகத்தை விட 5 புள்ளிகள் மாத்திரமே குறைவாகக் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

சீசர் 1940-1950 காலப்பகுதியில் பார்சிலோனாவிற்காக போட்டிகளில் பங்குபற்றியதோடு, 1995ஆம் ஆண்டு தனது 74ஆவது வயதில் இறந்திருந்திருந்தார். இதற்கு முன்னர் அவர் 235 கோல்களை பார்சிலோனாவிற்காகப் பெற்றிருந்ததாக நம்பப்பட்டிருந்த போதிலும், அவர் 232 கோல்களைப் பெற்றிருந்ததாக தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now