மகிந்த அரசாங்கத்தின் பிழையான வெளிநாட்டுக்
கொள்கையினாலேயே ஜெனிவா மனித உரிமைக் கூட்டத் தொடரில் இந்தியா, இலங்கைக்கு
எதிராக செயற்பட காரணமாக அமைந்ததாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற
உறுப்பினர் சஜித் பிரேமதாஸ குற்றம் சாட்டியுள்ளார்.
கிருலப்பனையிலுள்ள போதி ராஜசிங்க அமைப்பின் அலுவலகத்தில் இடம்பெற்ற
ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போது இதனைத்
தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
அரசாங்கத்தின் பிழையான வெளிநாட்டு கொள்கைகளுக்கு வெளிவிகார அமைச்சரே
பொறுப்புக் கூற வேண்டும் இல்லை என்றால் வெளிவிகார அமைச்சர் என்ற வகையில்
ஜீ.எல்.பீரிஸ் உடனடியாக பதவி விலக வேண்டும்
புலம்பெயர்ந்த தமிழர்கள் இலங்கையில் பிரிவினைவாதத்தை ஏற்படுத்த
முயற்சிக்கின்றனர் என அரசாங்கம் இன்று புதுக் கதையொன்றை கூறுகிறது. இவ்வாறு
கூறி தேசிய இப்பிரச்சினையை சிக்கலாக்கிக் கொள்ளக் கூடாது.
மகிந்த அரசாங்கம் ஒன்றை சரியாக புரிந்து கொள்ள வேண்டும் புலம்பெயர்
தமிழர்கள் வேறு புலம்பெயர் புலி ஆதரவுத் தமிழர்கள் குழு வேறு இரண்டினையும்
ஒன்றாக பார்க்கக்கூடாது.
தமிழ் மக்கள் அனைவரும் பிரிவினைக்கு ஆதரவானவர்கள் அல்ல
பிரிவினைவாதத்தினை எதிர்ப்பவர்களும் உள்ளார்கள் என்பதையும் புரிந்து கொண்டு
ஆட்சி செய்யவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
|