இலங்கைக்கு உலக பொருளாதார தடை விதிக்க வேண்டும்

இலங்கைக்கு உலக பொருளாதார தடை விதிக்க வேண்டும்இலங்கையில் உள்ள ஈழத் தமிழர்கள் வாழ்வுக்கு ஒரே குரல் கொடுப்போம். இலங்கைக்கு உலக பொருளாதார தடை விதிக்க வேண்டும். ஈழத்தமிழர்களின் வாழ்வுரிமைக்கு ஒரே தீர்வு அங்கு தமிழ் ஈழம் என்ற ஒரே முடிவு.

இவ்வாறு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.

திராவிடர் கழகம் சார்பில் உரிமை பாதுகாப்பு பிரசார பொதுக்கூட்டம் கரூர் காமாட்சியம்மன் கோவில் எதிரில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கலந்து மேலும் உரையாற்றுகையில்,

இலங்கையில் தமிழ் ஈழம் வேண்டும். இதற்காக தமிழ் ஈழ ஆதரவு இயக்கம் உருவாக்க வேண்டும். அதன் மூலம் இலங்கையில் நிரந்தர தீர்வு காணப்படும் என அவர் குறிப்பிட்டார்.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now