யுவராஜ்ஜின் மறுபிறப்பு!

என்னுடைய வாழ்க்கையில் புற்றுநோயால் போராடியது மிகக் கடினமான காலக்கட்டம்.
இதை உலகக் கோப்பையோடு ஒப்பிடமாட்டேன். புற்றுநோயோடு போராடுவதைவிட உலகக் கோப்பையில் விளையாடுவது எளிதான விஷயம். புற்றுநோய் நிறைய பாடங்களை கற்றுக்கொடுத்திருக்கிறது.
ஒருவேளை புற்றுநோய் பாதிப்பே என் வாழ்வின் சிறந்த விஷயமாகக் கூட இருக்கலாம். இப்போது சொல்லாவிட்டாலும், சில காலங்களுக்குப் பிறகு நான் அப்படி உணரலாம்.
நான் கீமோதெரபி சிகிச்சை மேற்கொண்டபோது, அங்கு என்னைவிட வயதில் பெரியவர்கள் எல்லாம் சிகிச்சை பெற்றனர். அவர்களை பார்த்தபோது இவர்களால் புற்றுநோயிலிருந்து குணமடைய முடியும் என்றால்? நம்மால் ஏன் முடியாது என்று நினைத்தேன். அவர்கள் எனக்கு மிகுந்த தூண்டுதலாக இருந்தார்கள்

என்று தெரிவித்துள்ளார் யுவராஜ் சிங்க்

மேலும் எனது நிலை பற்றி அனைவரும் அறியவே டுவிட்டரில் தொடர்ந்து இணைந்திருந்ததாக தெரிவித்துள்ளார். அத்துடன் இப்போது ஓய்வில் இருப்பதே முக்கியமாகும் எனவும் இரு மாதங்களின் பின்னரே விளையாடுவதற்காக திரும்புவேன் எனவும் கூறியுள்ளார் அவர்.
 
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now