போர்
பின்னர் இராணுவத்தினரிடம் சரணடையாத விடுதலைப் புலி உறுப்பினர்கள் மக்கள்
மத்தியில் இருப்பதாக பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ
தெரிவித்துள்ளார்.
எனினும், அவர்கள் அடையாளம்
காணப்படவில்லையென அவர் கூறினார். இது இலங்கைக்கு பாரிய அச்சுறுத்தலாகும்.
வெளிநாடுகளிலுள்ள பல அமைப்புக்கள் இலங்கையை ஸ்திரமற்ற நிலைக்குள் தள்ள
முயற்சித்து வருகின்றன.
இவ்வாறான நிலையில் விடுதலைப் புலி அமைப்பு மீண்டும் இயங்க வாய்ப்புள்ளது என பாதுகாப்புச் செயலர் எச்சரித்துள்ளார்.