ஹிருனிகாவுக்கு ஆபத்து என்றால் அதிகாரம் மிக்க மூன்று சகோதரர்களே பதில் கூறவேண்டும்

கொலை செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லச்மன் பிரேமசந்திரனின் புதல்வி ஹிருனிகாவுக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை தொடர்பில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று இலங்கை ஜனாதிபதியிடம் கோரப்பட்டுள்ளது. பாரத லச்மனின் சகோதரரான அசல பிரேமரட்ண இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.கொலன்னாவையில் வைத்து தமது தந்தை மற்றும் ஏனைய மூவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் உண்மையை கண்டறிவதற்காக ஹிருனிக்கா போராடி வருகிறார்.
இந்தநிலையில் அவரின் செயற்பாடு இலங்கையில் உள்ள அதிகாரம் மிக்க சிலருக்கு பிரச்சினையை உண்டுப்பண்ணியுள்ளது.

இதனையடுத்து ஹிருனிகாவுக்கும் மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இந்தக்கோரிக்கை ஜனாதிபதியிடம் விடுக்கப்பட்டுள்ள அதேநேரம் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மற்றும் அமைச்சர் பசில் ராஜபக்ச ஆகியோருக்கும் அனுப்பிவைக்கப்படடுள்ளது.

இதனைமீறி ஹிருனிகாவுக்கு ஏதாவது ஆபத்துக்கள் ஏற்படுமாயின் அதற்கு அதிகாரத்தில் உள்ள மூன்று சகோதரர்களுமே பதில் கூறவேண்டும் என்று அசல பிரேமசந்திர சுட்டிக்காட்டியுள்ளார்.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now