இலங்கையில்
நான்கு வகையான டெங்கு வைரஸ்கள் காணப்படுவதாக ஆய்வுகள் மூலம் தெரிய
வந்திருப்பதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு
தெரிவித்துள்ளது.
இந்த நான்கு வகை டெங்கு வைரஸ்களும் டிவி1, டிவி2, டிவி3, டிவி4 என அடையாளப்படுத்தப் பட்டிருப்பதாகவும் அப்பிரிவு அறிவித்துள்ளது.நாட்டில் நான்கு வகையான டெங்கு வைரஸ்கள் காணப்பட்ட போதிலும் தற்போது டிவி1 வகை வைரஸ்களே பரவியுள்ளதாகவும் அந்த ஆய்வின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மனித செயற்பாடுகள் காரணமாகவும் சுற்றாடலில் ஏற்படுகின்ற மாற்றங்களாலும் டெங்கு வைரஸ்களும் மாற்றமடைந்துள்ளது. இது டெங்கு ஒழிப்புக்கு பெரும் சவாலாக விளங்குவதாகவும் அந்த ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
டெங்கு நுளம்புகள் மனித இரத்தத்தை மாத்திரமே உறிஞ்சிக் குடிக்க கூடியவை. ஆனால் ஏனைய நுளம்புகள் மனித இரத்தத்தையோ, மிருகங்களின் இரத்தத்தையோ ஒரு தடவை தான் குடிக்கும் என்பதும் தெரிய வந்திருக்கின்றது.
தேசிய நுளம்பு ஒழிப்பு வாரமாக இவ்வாரம் பிரகடனப்படுத்தப்பட்டிருக்கின்றது. இவ்வாரத்தையொட்டி சுகாதார அமைச்சின் நோய் பரவுதல் தடுப்பு பிரிவு இத்தகவல்களை வெளியிட்டிருக்கின்றது.
இதேவேளை நுளம்பு ஒழிப்பு நடவடிக்கைகளின் நிமித்தம் நாடெங்கிலும் 120 நுண்ணுயிரியல் மருத்துவ நிபுணர்கள் ஆய்வுகளை மேற்கொண்டிருப்பதாக சுகாதார அமைச்சின் அதிகாரியொருவர் நேற்று தெரிவித்தார். முப்படை மற்றும் பொலிஸாரினதும், முழுமையான ஒத்துழைப்புடன் நுளம்பு ஒழிப்பு பணிகள் சிறப்பான முறையில் முன்னெடு க்கப்படுவதாகவும் அவர் கூறினார்.