பல்கலைக்கழக அனுமதி விண்ணப்பப்படிவ விநியோகம் ஆரம்பம்






2011/2012 கல்வி ஆண்டுக்கான பல்கலைக்கழக அனுமதி விண்ணப்பப்படிவம் நேற்று (29) தொடக்கம் விநியோகிக்கப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

2011ம் ஆண்டு இடம்பெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்க முடியும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

2011ம் ஆண்டு உ/த பரீட்சை பெறுபேறு வெளியானவுடன் அதில் பல குளறுபடிகள் காணப்பட்டன.

இதனையடுத்து பரீட்சை விடைத்தாள் மீள்திருத்த சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதாவது 2011ம் வருடம் பரீட்சைக்குத் தோற்றியவர்களில் 50% மாணவர்கள் விடைத்தாள் மீள்திருத்தத்திற்கு விண்ணப்பித்துள்ள நிலையில் பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பம் விநியோகிக்கப்படுகிறது.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now