இந்தியாவில் புலமை பரிசில்கள் - இலங்கையர்களுக்கும் வாய்ப்பு


எதிர்வரும் 2012 - 2013 ஆம் ஆண்டு கற்கை நெறிக்களுக்காக புலமை பரிசில்களை வழங்க இந்திய அரசாங்கம் முன்வந்துள்ளது.

இலங்கைக்கான இந்திய தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில்  இதுதொடர்பாக விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இதன்படி இந்தியாவில் தமது கற்றை நெறியை மேற்கொள்வதற்கான 47 புலமை பரிசில்களை வழங்க இந்தியா தீர்மானித்துள்ளது.

“நேரு ஞாபகார்த்த புலமை பரிசில்” திட்;டத்தின் அடிப்படையில் 40 புலமை பரிசில்கள் வழங்கப்பட உள்ள அதேவேளை, “ பொதுநலவாய புலமை பரிசில்கள்” திட்டத்தின் கீழ் 5 புலமை பரிசில்களும் வழங்கப்படவுள்ளன.

இது தவிர IOR – ARC  திட்டத்தின் கீழ் இரண்டு பட்ட பிற்படிப்பிற்கான புலமை பரிசில்கள் வழங்கப்படவுள்ளது.

புலமை பரிசில்கான விண்ணப்பங்கள் இந்திய தூதரகத்தினால் எதிர்வரும் 27 ஆம் திகதி வரையில் ஏற்றுக்கொள்ளப்படும்.

இது தொடர்பான மேலதிக விபரங்களை www. mohe.gov.lk  என்ற இணையத்தின் ஊடாக  அறிந்து கொள்ள முடியும்.

மீண்டுமொருமுறை அந்த இணையத்தள முகவரியை அறியதருகின்றோம் www. mohe.gov.lk .
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now