வாகனங்கள் பரிசோதனை: தென் அதிவேக நெடுஞ்சாலையில்

தென் அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் சகல வாகனங்களினதும் விசேட தகுதி சான்றிதழ் ஒன்றை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த தகவலை தென் அதிவேக நெடுஞ்சாலையின் நடவடிக்கைகள் பணிப்பாளர் பீ டி கே பண்டார வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பான சான்றிதழ் கட்டாயமாக வாகனங்களில் ஒட்டப்பட்டிருக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வாகனங்களின் புகை, நிறை, தடையாழி, ஆகியவவை தொடர்பான பரிசோதனை நடத்தப்படுவதாக தெரிவித்த அவர் இதற்காக நிறுவனங்கள் இணைத்துக் கொள்ளப்படும் எனவும் பீ டி கே பண்டார குறிப்பிட்டார்.

இது தவிர இந்த பாதை ஊடாக பயனிக்கும் வாகன சாரதிகளின் ஒழுக்கம் தொடர்பாக அதிக கனவம் செலுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, கடந்த இரண்டு மாத காலத்திற்குள் தென் அதிவேக நெடுஞ்சாலையின் ஊடாக 151 மில்லியம் ரூபா இலாபமாக பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இத்துடன் இந்த பாதையில் இதுவரையில் 96 விபத்துக்கள் இடம்பெற்றிருப்பதாகவும், அவர் குறிப்பிட்டார்.

Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now