ராஜினாமா செய்யுமாறு துப்பாக்கி முனையில் நிர்ப்பந்திக்கப்பட்டேன்: மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி தெரிவிப்பு.

பொலிஸாரினாலும் இராணுவத்தினாலும் மேற்கொள்ளப்பட்ட 'புரட்சியொன்றின்போது' ஜனாதிபதி பதவியிலிருந்து ராஜினாமா செய்வதற்கு தான் துப்பாக்கிமுனையில் நிர்ப்பந்திக்கப்பட்டதாக மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட் நேற்று புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

நீதிபதியொருவரை கைது செய்ததையடுத்து இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்கள் காரணமாக ஜனாதிபதி பதவியிலிருந்து மொஹமட் நஷீட் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில் ராஜினாமா செய்வதற்கு தான் துப்பாக்கி முனையில் நிர்ப்பந்திக்கப்பட்டதாக மொஹமட் நஷீட் கூறியுள்ளார்.

பொலிஸாரினதும் படையினரதும் இந்நடவடிக்கையை நஷீட்டின் கீழ் உப ஜனாதிபதியாக இருந்தவரும் தற்போதைய ஜனாதிபதியுமான மொஹமட் வாஹீட் ஹசன் மணிக் அறிந்திருந்தார் எனவும் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட் கூறியுள்ளார்.

எனினும் இதை ஜனாதிபதி மொஹமட் வாஹீட் ஹசன் மறுத்துள்ளார். இதேவேளை மொஹமட் நஷீட்டை ஜனாதிபதி பதவியிலிருந்து வெளியேற்றியமைக்கு எதிராக நஷீட் உட்பட மாலைதீவு ஜனநாயகக் கட்சி ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் தலைநகர் மாலேயில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது பொலிஸார் குண்டாந்தடி மற்றும் கண்ணீர் ப் புகை பிரயோகம் மேற்கொண்டதால் பலர் காயமடைந்துள்ளனர்.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now