ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் உதவித்தொகை அதிகரிக்கப்படுமா?

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான உதவித்தொகையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படுமா என்று புத்திக்க பத்திரண இன்று பாராளுமன்றத்தில் கேள்வியெழுப்பினார்.
 

வருடாந்தம் மாணவர்களுக்கு வழங்கப்படுகின்ற மாணவர் உதவித் தொகை எந்த விதத்திலும் போதுமானதாக இல்லையென்பதுடன், அது உரிய முறையில் அல்லது உரிய நேரத்தில் வழங்கப்படுவதில்லை என்றும் பாராளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டினார்.

எனினும் இதுவொரு ஊக்குவிப்பு கொடுப்பனவு மாத்திரமே எனவும், அதன்மூலம் அனைவரதும் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியாது என்றும் இதற்குப் பதிலளித்த கல்விப் பிரதி அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்ஸா தெரிவித்தார்.

Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now