
நாள்
தோறும் இலங்கையில் சுமார் இரண்டு கிலோ கிராம் எடையுடையஹெரோயின் போதைப்
பொருள் பயன்படுத்தப்படுவதாக தேசிய போதைப் பொருள் தடுப்புப்
பிரிவுதெரிவித்துள்ளது.
தேசிய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு நாடு தழுவிய ரீதியில் ஆய்வு ஒன்றை நடாத்தியுள்ளது.
நாட்டில் சுமார் 45000 ஹெரோயின் போதைப் பொருள் பாவனையாளர்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வருடாந்தம் 763 கிலோ கிராம் எடையுடைய ஹெரோயின் போதைப் பொருள்விற்பனை செய்யப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது.
கொழும்பில் சுமார் 350 ஹெரோயின் விநியோகஸ்தர்கள் இயங்கிவருவதாகவும் இதில் 45 பேர் மொத்த வியாபாரிகள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
போதைப்
பொருள் விநியோகம் செய்வோர் மற்றும் பயன்படுத்துவோருக்குஎதிராக அரசாங்கம்
பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அண்மையில் பல போதைப் பொருள் விநியோகஸ்தர்களுக்கு இலங்கை நீதிமன்றம்மரண தண்டனை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.