மாரடைப்பால் இதயத்துக்கு ஏற்படும் பாதிப்பை, நோயாளரின் இதயத்தில்
இருந்தே பெறப்படும் கலங்களின் மூலம் குணப்படுத்த முடியும் என அமெரிக்க
வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் பிரபல மருத்துவ இதழ் ஒன்றில் வெளியாகியுள்ள கட்டுரையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாரடைப்பால் பாதிக்கப்பட்டதன் பின்னர் ஏற்படுகின்ற பாதிப்புகளுக்கு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இந்தநிலையில் தற்போது வெளியாகியுள்ள இந்த செய்தி, மகிழ்சிகரமானது என பிரித்தானிய இருதய சங்கம் தெரிவித்துள்ளது.
நுரையீரலில் பிராணவாயு பற்றாக்குறை ஏற்படும் போது, மாரடைப்பு ஏற்படுகிறது.
இந்த பிரச்சினை சீர் செய்யப்பட்டதன் பின்னர் இதயத்தினால் உடல் முழுவதும் இரத்தத்தை பாய்ச்சுவதற்கு போதிய வலு கிடைக்காமல் போகிறது.
எனினும், புதிய முறையை பயன்படுத்தி சிகிச்சை மேற்கொள்ளும் போது, இந்த நிலைமை கட்டுப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.